Sunday, September 16, 2012

நகைச்சுவை நடிகர் லூஸ்மோகன் திடீர் மரணம்

நகைச்சுவை நடிகர் லூஸ்மோகன் திடீர் மரணம் நகைச்சுவை நடிகர் லூஸ்மோகன் திடீர் மரணம்
நகைச்சுவை நடிகர் லூஸ்மோகன் திடீர் மரணம்

பிரபல காமெடி நடிகர் லூஸ் மோகன் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 84. லூஸ்மோகன் 1000 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார். ரஜினிகாந்துடன் 'மூன்று முகம்', 'மாப்பிள்ளை', 'தர்மதுரை' படங்களிலும், கமலுடன் 'நானும் ஒரு தொழிலாளி' படத்திலும் நடித்துள்ளார். 'ரோஜாப்பூ ரவிக்கைகாரி' படத்தில் சிவக்குமாருடன் இணைந்து நடித்தார். பார்த்திபனுடன் 'அழகி' படத்திலும் வந்தார்.

சென்னை மயிலாப்பூர் சாலை தெருவில் உள்ள வீட்டில் மகன் கார்த்திக்குடன் வசித்து வந்தார். சில மாதங்களாக அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. கை, கால்களும் செயல் இழந்தன.

உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. லூஸ் மோகன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தினார்கள்.

இன்று மாலை உடல் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மயிலாப்பூர் ஐ.ஜி. ஆபீஸ் பின்புறம் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. மரணம் அடைந்த லூஸ் மோகனுக்கு ரேவதி, கீதா, லட்சுமி என்ற மகள்களும் உள்ளனர். சென்னை தமிழில் பேசி காமெடி செய்த முதல் நடிகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பில் விபத்து: நடிகை யாமிகவுதம் காயம்

படப்பிடிப்பில் விபத்து: நடிகை யாமிகவுதம் காயம் படப்பிடிப்பில் விபத்து: நடிகை யாமிகவுதம் காயம்
படப்பிடிப்பில் விபத்து: நடிகை யாமிகவுதம் காயம்

சென்னை, செப். 15-

மொழி படத்தை இயக்கி பிரபலமானவர் ராதா மோகன். இவர் தற்போது கவுரவம் என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். இதில் நாயகனாக அல்லு சிரிஷ், நாயகியாக யாமிகவுதம் நடிக்கின்றனர். யாமி மும்பையை சேர்ந்தவர். கவுரவம் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். இந்த படத்தை பிரகாஷ்ராஜ் தயாரிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு ராஜமுந்திரியில் விறுவிறுப்ப ாக நடக்கிறது. இதற்காக படக்குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர். பாடல் காட்சியொன்றை படமாக்கியபோது யாமிகவுதம் கீழே விழுந்து காயம் அடைந்தார். பாடல் காட்சியில் யாமிகவுதம் சைக்கிள் ஓட்டி செல்வது போல் படமாக்கினர்.

அப்போது நிலை தடுமாறி சைக்கிலோடு கீழே விழுந்தார். அவருக்கு பலத்த அடிபட்டு ரத்தம் கொட்டியது. இதை பார்த்ததும் படக்குழுவினர் பதறினார்கள். உடனடியாக டா� ��்டர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. வலி நிவாரண மாத்திரைகளை யாமி சாப்பீட்டு ஓய்வு எடுத்தார். இந்த விபத்தால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.

மெரினா பட வழக்கில் கோர்ட்டு புது உத்தரவு

மெரினா பட வழக்கில் கோர்ட்டு புது உத்தரவு மெரினா பட வழக்கில் கோர்ட்டு புது உத்தரவு
மெரினா பட வழக்கில் கோர்ட்டு புது உத்தரவு

சிவகார்த்திகேயன், ஓவியா ஜோடியாக நடித்த படம் மெரினா. பாண்டிராஜ் இயக்கினார். கடந்த பிப்ரவரியில் இப்படம் ரிலீசானது. இந்த படத்துக்கு எதிராக இணை தயாரிப்பாளர் பாலகிருஷ்ணன் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

மெரினா படத்தில் என்னை தயாரிப்பாளராக போடுவதாக பாண்டிராஜ் கூறினார். இதற்காக என்னிடம் ரூ.50 லட்சம் வாங்கினார். ஆனால் படம் ரிலீசாகும் போது எனது பெயரை தயாரிப்பாளர் என்று போடவில்லை. இதுகுறித்து சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அங்கு இருதரப்புக்கும் சமரசம் ஏற்பட்டது. எனக்கு ரூ.50 லட்சம் தருவதாக பாண்டிராஜ் ஒப்புக்கொண்டார். லாபத்திலும் பங்கு தருவதாக கூறினார்.

ஆனால் சொன்னபடி கொடுக்கவில்லை. எனவே மெரினா படத்தின் வரவு � ��ெலவு கணக்குகளை ஆராய அட்வகேட் கமிஷனை நியமிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

வழக்கை 7-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி சந்திர சேகரன் விசாரித்து வக்கீல் ரங்கனை அட்வகேட் கமிஷனாக நியமித்து இரு தரப்பிலும் வரவு செலவு கணக்கை விசாரித்து வருகிற 20-ந்தேதி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். 

Saturday, September 15, 2012

இந்தி நடிகை ராணிமுகர்ஜியின் ரசிகன் நான் பிருதிவிராஜ்

இந்தி நடிகை ராணிமுகர்ஜியின் ரசிகன் நான் பிருதிவிராஜ் இந்தி நடிகை ராணிமுகர்ஜியின் ரசிகன் நான் பிருதிவிராஜ் இந்தி நடிகை ராணிமுகர்ஜியின் ரசிகன் நான் பிருதிவிராஜ்

சென்னை, செப். 15-

தமிழ், மலையாள படங்களில் நடித்த பிருதிவிராஜ் இந்திக்கு போய் உள்ளார். அங்கு அய்யா என்ற படத்தில் நடிக்கிறார். இதில் பிருதிவிராஜ் ஜோடியாக ராணி முகர்ஜி நடிக்கிறார். இந்தியில் நடிப்பது குறித்து பிருதிவிராஜ் கூறியதாவது:-

அய்யா படத்தின் கதை மிகவும் பிடித்தது. எனவே நடிக்கிறேன். காமெடி, நடனம் என எல்லா விஷயங்களும் இருக்கும். இதில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் ராணி முகர்ஜியின் தீவிர ரசிகன். அவர் நடித்த படங்களை எல்லாம் பார்த்து இருக்கிறேன். அவருடன் இணைந்து நடிப்பது பெருமையாக உள்ளது. அய்யா படத்தில் ராணி முகர்ஜி மராத்தி பெண்ணாக வருகிறார்.

சச்சின் குண்டல்கர் இயக்குகிறார். அடுத்த மாதம் இப்படம் ரிலீசாக உள்ளது.

சிங்கம் 2 படத்தில் ஒரு பாடலுக்கு சூர்யாவுடன் ஆட நயன்தாராவுக்கு அழைப்பு


சிங்கம் 2 படத்தில் ஒரு பாடலுக்கு சூர்யாவுடன் ஆட நயன்தாராவுக்கு அழைப்பு சிங்கம் 2 படத்தில் ஒரு பாடலுக்கு சூர்யாவுடன் ஆட நயன்தாராவுக்கு அழைப்பு சிங்கம் 2 படத்தில் ஒரு பாடலுக்கு சூர்யாவுடன் ஆட நயன்தாராவுக்கு அழைப்பு

சென்னை, செப். 15-

சூர்யா அனுஷ்கா ஜோடியாக நடித்த சிங்கம் படம் வெற்றிகரமாக ஓடியது. ஹரி இயக்கி இருந்தார். இந்தியிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது சிங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தை சிங்கம் 2 என்ற பெயரில் ஹரி இயக்குகிறார். இதிலும் சூர்யாவே நாயகனாக நடிக்கிறார்.

அனுஷ்கா, ஹன்சிகா இருவரும் நாயகிகளாக நடிக்க உள்ளனர். இதன் படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் தூத்துக்குடியில் துவங்க உள்ளது. இந்த படத்தில் குத்துப் பாடல் ஒன்று இடம் பெறுகிறது. இதில் சூர்யாவுடன் ஆட நயன்தாராவை அழைத்துள்ளனர்.

நயன்தாரா ஏற்கனவே விஜய்யுடன் சிவகாசி படத்தில் கோடம்பாக்கம் ஏரியா என்ற பாடலுக்கு குத்தாட்டம் ஆடி உள்ளார். எனவே சூர்யாவுடன் ஆட அவர் சம்மதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை நயன்தாரா மறுத்தால் ஸ்ரேயாவை அழைக்க திட்டமிட்டுள்ளனர். இது குறித்து இயக்குனர் ஹரி கூறும் போது குத்துப் பாட்டுக்கு ஆட முன்னணி கதாநாயகிகளுடன் பேசி வருகிறோம் என்றார்.

86 பேருக்கு அனுஷ்கா மது விருந்து



86 பேருக்கு அனுஷ்கா மது விருந்து கொடுத்தார்: இந்து மக்கள் கட்சி கண்டனம் 86 பேருக்கு அனுஷ்கா மது விருந்து கொடுத்தார்: இந்து மக்கள் கட்சி கண்டனம் 86 பேருக்கு அனுஷ்கா மது விருந்து கொடுத்தார்: இந்து மக்கள் கட்சி கண்டனம்

நடிகை அனுஷ்கா 'இரண்டாம் உலகம்' படக்குழுவினர் 80 பேருக்கு மது விருந்து அளித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். ஜார்ஜியாவில் இந்த விருந்து நடந்துள்ளது.

'இரண்டாம் உலகம்' படத்தில் ஆர்யா நாயகனாகவும் அனுஷ்கா நாயகியாகவும் நடிக்கின்றனர். செல்வராகவன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு பல மாதங்களாக விறுவிறுப்பாக நடந்தது. இறுதியாக ஜார்ஜியாவில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

படப்பிடிப்பு கடைசி நாளில் அனுஷ்கா தன் சொந்த செலவில் இந்த விருந்தை நடத்தினார். ஜார்ஜியாவில் உள்ள ஒயின் வகைகள் பிரபலமானவையாகும். 80 பேருக்கும் பெட்டி பெட்டியாக ஒயினை வரவழைத்து குடிக்க வைத்தார். இதனை இந்து மக்கள் கட்சி கண்டித்துள்ளது.

அதன் மாநில செயலாளர் பி.ஆர்.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனுஷ்கா 80 பேருக்கு மது விருந்து அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. படக்குழுவினருக்கும் வேறு ஏதேனும் பரிசு பொருட்கள் வாங்கி கொடுத்து இருக்கலாம். மது விருந்து என்பது பண்பாட்டுக்கு விரோதமானது.

இதன் மூலம் அன்னிய கலாச்சாரத்தோடு ஒன்றி இந்திய கலாச்சாரத்தை சீரழிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அனுஷ்கா யோகா ஆசிரியை என்கின்றனர். யோகாவில் இதைத்தான் கற்றாரா? என்று புரியவில்லை என்று குறிப்பிட்டு உள்ளார்.

Early Marriage is Good for You 15 வயதில் திருமணம்

Early Marriage is Good for You
Early Marriage Is Good You

தாத்தா பாட்டி காலத்தில் 15 வயதில் திருமணம் செய்வது சதாரணமான விசயம். அதே நம் அப்பா அம்மா காலத்தில் 21 வயதானாலே பெண் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். ஆனால் இன்றைக்கு நன்றாக படித்து கைநிறைய சம்பாதித்தாலும் சரியான பருவத்தில் திருமணம் செய்யாமல் 30 வயதுவரை தள்ளிப்போடுகின்றனர். இது உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது நிபுணர்களின் கருத்து.

பருவம் பார்த்து விதை விதைக்க வேண்டும் அப்பொழுதுதான் சரியாக முளைக்கும் என்பது விவசாயத்திற்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும்தான் பொருந்தும் என்பது நிபுணர்களின் அறிவுரை. சரியான பருவத்தில் திருமணம் செய்வதனால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

சீக்கிரம் செட்டில் ஆகுங்க!

இன்றைய இளைய தலைமுறை கல்வியில் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள். நல்ல படிப்பு, அதற்கேற்ற வேலை, கைநிறைய சம்பளம் என்று ஒரு லட்சியத்தை மனதில் பதித்துக்கொண்டு அதை சாதித்தும் விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் படிப்புக்கேற்ற வேலை கிடைத்ததும் அதற்கு மேலும் தள்ளிப்போடாமல் தாமதமின்றி திருமணம் செய்து கொள்வது அவசியம். இன்றைய காலத்தில் 15 வயதிற்குள் பால்ய விவாகம் செய்வது சாத்தியமில்லை. ஆனால் இளம் பருவத்தில் அதாவது 21 வயதில் இருந்து 25 வயதிற்குள் திருமணம் செய்து வைக்கும் வழக்கத்திற்கு மாற முயற்சிக்கலாம்.

இளம் வயதில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளின் பெற்றோர் நல்ல ஆரோக்கிய மாக இருப்பார்கள். அதனால் பிறக்கப்போகும் தங்கள் பேரன், பேத்திகளை அவர்கள் தங்கள் பொறுப்பில் பார்த்துக் கொள்வார்கள். இதனால் தலையாய பிரச்சினையான குழந்தை வளர்ப்பது கூட தம்பதிகளுக்கு சாதாரண விஷயமாகி விடுகிறது.

18 முதல் 25 வயதில் திருமணம் செய்து கொண்ட 8ஆயிரம் இளம் தம்பதியரிடம் மேற்கொண்ட ஆய்வில் குடும்பத்தில் பெற்றோர் - குழந்தைகளிடையேயான உறவுமுறையில் அதிக அளவில் ஒரு ஒட்டுதல் இருந்தது. தலைமுறை இடைவெளிகள் அதிக்கம் இல்லை. இளம் வயது தம்பதியருக்குப் பிறந்த குழந்தைகள் அதிக புத்திசாலிகளாக இருந்தனர். திருமணம் காரணமாக அவர்களின் நடத்தையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருந்தது. இந்த வயதினருக்கு ஏற்படும் மன அழுத்தம் தடுக்கப்பட்டது.

உளவியல் சிக்கல்கள்

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் 15 வயதிற்குள்ளாகவே, இளமைப்பருவத்தில் அடியெடுத்து வைத்து விடுகிறோம். ஹார்மோன்களின் மாற்றத்தினால் உடல் தேவைகள் தொடங்கிவிடும். ஆனால் வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 30, 35 வயதுவரை உடல் தேவையை பூர்த்தி செய்யாமல் இயற்கைக்கு எதிராக வாழ முற்படுவதனால் பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.

சிசேரியன் பிரசவங்கள்

தாமதமான திருமணம் உடல் ரீதியாக வும், உளவியல் ரீதியாகவும் கூட பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. தாமதமாக திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. கருத்தரிக்க தாமதம். அப்படியே கருத்தரித்தாலும் சுகப்பிரசவம் கேள்விக்குறி என்ற நிலை. காலதாமதமாக திருமணமானவர்களுக்கே அதிகமாக சிசேரியன் பிரசவம் நடக்கிறது.

பாட்டி காலத்திலும் அதற்கு முன்பும் வாழ்ந்தவர்கள் அறுவைச் சிகிச்சையை அறிந்த தில்லை. அவர்கள் ஆரோக்கியமான வயதில் திருமணம் செய்து கர்ப்பமடைந்தனர். எளிதாக குழந்தை பெற்றுக் கொண்டனர். அதிகமாக சுகப்பிரசவங்களே நடந்தன. படிப்பு, வேலை, சொந்த காலில் நின்ற பிறகே இல்லறம் என்றெல்லாம் கூறி திருமணத்தை தாமதமாக செய்து கொள்கிறார்கள். இதனால் வயது முதிர்வடையும்போது உடல் வளைந்து கொடுக்கும் தன்மையை இழக்கிறது. இடுப்பெலும்பு வளைந்து கொடுக்கும் வயதைத்தாண்டி திருமணம் செய்துகொள்ளும்போது அநேக பெண்களுக்கு சிசேரியன் அவசியமாகி விடுகிறது.

தந்தையாகும் தகுதி

ஆண்கள், தாமதமாக திருமணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தால் தவறான பழக்கம் உடையவர்களாகிறார்கள். இயற்கை இச்சைகளை தீர்ப்பதற்காக செக்ஸ் புத்தகம், பலான படங்கள், சுய இன்பம், இணைய தள தேடல் என மாற்று வழிகளில் இன்றைய இளைஞர்கள் பயணப்படும் பின்னணியில், தள்ளிப்போடப்படும் அவர்கள் திருமணம் இருக்கிறது.

இதனால் தற்காலிக உணர்வுத் தேவைகளை முறைகேடாக அணுகப்போய், அதனால் எயிட்ஸ் அதிகரிப்பு, கள்ளக்காதல் போன்ற கலாசார சீரழிவும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அதனால் திருமண சமயத்தில் வீரியம் குறைந்து தந்தையாகும் தகுதியை பலர் இழக்கின்றனர்.

ஆகவே இன்றைய பெற்றோர்களே நீங்கள் தாமதமாக திருமணம் செய்து கொண்டிருந்தாலும் பரவாயில்லை உங்களின் குழந்தைகளுக்காவது காலா காலத்தில் திருமணத்தை முடித்து வைத்து சீக்கிரம் பேரன் பேத்தியை பார்த்து செட்டில் ஆகும் வழியைப் பாருங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

Popular Posts