Monday, November 5, 2012

இழுத்துப் போர்த்திக்கிட்டு நடிக்க முடியாது : பிரியாமணி!

இழுத்துப் போர்த்திக்கிட்டு நடிக்க முடியாது : பிரியாமணி!
priyamani4
"சாருலதா" படம்மூலம் தமிழுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார் பிரியாமணி. ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகளாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்றார். சாருலதா படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சுச்சு. ஒரு சில இடங்களில் சரியாக போகலைன்னாலும் எனக்கு நிறைய பாராட்டு கிடைச்சது. தேசிய விருது பெற்ற நீங்கள் ஏன் இப்படி கிளாமர் ரோலில் நடிக்கிறீர்கள் என்று கேட்கின்றனர். தேசிய விருது வாங்கிட்டா…? இழுத்துப் போர்த்திக்கிட்டு நடிக்கணும் என்று கட்டாயம் இருக்கா…? அந்தபடத்தில் அப்படி ஒரு கதாபாத்திரம். எனக்கு அப்படி ஒரு விருது கிடைத்ததற்காக டைரக்டர் அமீருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அது அந்த படத்தோடு முடிஞ்சு போச்சு. அதற்காக தொடர்ந்து பாவாடை தாவணியில் நடிக்க முடியுமா,? என கேள்வி எழுப்பியுள்ளார் பிரியாமணி.

Popular Posts