Sunday, September 16, 2012

எம்.டிவி ஷோவில் ஏ.ஆர்.ரகுமான் பாடுகிறார்

எம்.டிவி ஷோவில் ஏ.ஆர்.ரகுமான் பாடுகிறார் எம்.டிவி ஷோவில் ஏ.ஆர்.ரகுமான் பாடுகிறார்
எம்.டிவி ஷோவில் ஏ.ஆர்.ரகுமான் பாடுகிறார்

'எம்.டிவி' பிரபலங்களை வைத்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இசை, நாட்டியம் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை வைத்து சிறப்பு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குகிறது.

'எம்.டிவி'யின் இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது ஆகும். ஏற்கனவே ஒரு சீஸன் இசை நிகழ்ச்சியை தயாரித்து வழங்கியது. தற்போது இசை நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸனை தொடங்க உள்ளது.

'மியூசிக் ஷோ' இரண்டாவது சீஸனில் பிரபல இசைக் கலைஞர்களுடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் கலந்து கொண்டு பாடுகிறார். இதுபற்றி நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஒருவர் கூறியதாவது:-

இந்த முறை இசை உலகில் முன்னணியில் உள்ளவர்களை வைத்து இந்த நிகழ்ச்சியை தயாரிக்க திட்டமிட்டோம். இந்நிகழ்ச்சியில், ஏ.ஆர்.ரகுமானும் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியின் மிகப்பெரிய சொத்து அவர்தான்.

இந்த நிகழ்ச்சி தொடரில் லக்கி அலி, கைலாஷ் கேர் ஆகியோரும் பங்கேற்கின்றனர். இருவரும் இசை உலகில் பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர்கள். டிரம் கலைஞர் ரஞ்சித் பரோம் மற்றும் பிறதுறை கலைஞர்களும் கலந்து கொள்கின்றனர்.

பாகிஸ்தான் பாடகர் அதிப் ஆலம் வருவார் என எதிர்பார்க்கிறோம். நவம்பர் மாதம் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சிக்கான ஷ¨ட்டிங், அடுத்த வாரம் தொடங்குகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நகைச்சுவை நடிகர் லூஸ்மோகன் திடீர் மரணம்

நகைச்சுவை நடிகர் லூஸ்மோகன் திடீர் மரணம் நகைச்சுவை நடிகர் லூஸ்மோகன் திடீர் மரணம்
நகைச்சுவை நடிகர் லூஸ்மோகன் திடீர் மரணம்

பிரபல காமெடி நடிகர் லூஸ் மோகன் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 84. லூஸ்மோகன் 1000 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார். ரஜினிகாந்துடன் 'மூன்று முகம்', 'மாப்பிள்ளை', 'தர்மதுரை' படங்களிலும், கமலுடன் 'நானும் ஒரு தொழிலாளி' படத்திலும் நடித்துள்ளார். 'ரோஜாப்பூ ரவிக்கைகாரி' படத்தில் சிவக்குமாருடன் இணைந்து நடித்தார். பார்த்திபனுடன் 'அழகி' படத்திலும் வந்தார்.

சென்னை மயிலாப்பூர் சாலை தெருவில் உள்ள வீட்டில் மகன் கார்த்திக்குடன் வசித்து வந்தார். சில மாதங்களாக அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. கை, கால்களும் செயல் இழந்தன.

உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. லூஸ் மோகன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தினார்கள்.

இன்று மாலை உடல் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மயிலாப்பூர் ஐ.ஜி. ஆபீஸ் பின்புறம் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. மரணம் அடைந்த லூஸ் மோகனுக்கு ரேவதி, கீதா, லட்சுமி என்ற மகள்களும் உள்ளனர். சென்னை தமிழில் பேசி காமெடி செய்த முதல் நடிகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பில் விபத்து: நடிகை யாமிகவுதம் காயம்

படப்பிடிப்பில் விபத்து: நடிகை யாமிகவுதம் காயம் படப்பிடிப்பில் விபத்து: நடிகை யாமிகவுதம் காயம்
படப்பிடிப்பில் விபத்து: நடிகை யாமிகவுதம் காயம்

சென்னை, செப். 15-

மொழி படத்தை இயக்கி பிரபலமானவர் ராதா மோகன். இவர் தற்போது கவுரவம் என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். இதில் நாயகனாக அல்லு சிரிஷ், நாயகியாக யாமிகவுதம் நடிக்கின்றனர். யாமி மும்பையை சேர்ந்தவர். கவுரவம் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். இந்த படத்தை பிரகாஷ்ராஜ் தயாரிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு ராஜமுந்திரியில் விறுவிறுப்ப ாக நடக்கிறது. இதற்காக படக்குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர். பாடல் காட்சியொன்றை படமாக்கியபோது யாமிகவுதம் கீழே விழுந்து காயம் அடைந்தார். பாடல் காட்சியில் யாமிகவுதம் சைக்கிள் ஓட்டி செல்வது போல் படமாக்கினர்.

அப்போது நிலை தடுமாறி சைக்கிலோடு கீழே விழுந்தார். அவருக்கு பலத்த அடிபட்டு ரத்தம் கொட்டியது. இதை பார்த்ததும் படக்குழுவினர் பதறினார்கள். உடனடியாக டா� ��்டர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. வலி நிவாரண மாத்திரைகளை யாமி சாப்பீட்டு ஓய்வு எடுத்தார். இந்த விபத்தால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.

மெரினா பட வழக்கில் கோர்ட்டு புது உத்தரவு

மெரினா பட வழக்கில் கோர்ட்டு புது உத்தரவு மெரினா பட வழக்கில் கோர்ட்டு புது உத்தரவு
மெரினா பட வழக்கில் கோர்ட்டு புது உத்தரவு

சிவகார்த்திகேயன், ஓவியா ஜோடியாக நடித்த படம் மெரினா. பாண்டிராஜ் இயக்கினார். கடந்த பிப்ரவரியில் இப்படம் ரிலீசானது. இந்த படத்துக்கு எதிராக இணை தயாரிப்பாளர் பாலகிருஷ்ணன் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

மெரினா படத்தில் என்னை தயாரிப்பாளராக போடுவதாக பாண்டிராஜ் கூறினார். இதற்காக என்னிடம் ரூ.50 லட்சம் வாங்கினார். ஆனால் படம் ரிலீசாகும் போது எனது பெயரை தயாரிப்பாளர் என்று போடவில்லை. இதுகுறித்து சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அங்கு இருதரப்புக்கும் சமரசம் ஏற்பட்டது. எனக்கு ரூ.50 லட்சம் தருவதாக பாண்டிராஜ் ஒப்புக்கொண்டார். லாபத்திலும் பங்கு தருவதாக கூறினார்.

ஆனால் சொன்னபடி கொடுக்கவில்லை. எனவே மெரினா படத்தின் வரவு � ��ெலவு கணக்குகளை ஆராய அட்வகேட் கமிஷனை நியமிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

வழக்கை 7-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி சந்திர சேகரன் விசாரித்து வக்கீல் ரங்கனை அட்வகேட் கமிஷனாக நியமித்து இரு தரப்பிலும் வரவு செலவு கணக்கை விசாரித்து வருகிற 20-ந்தேதி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். 

Popular Posts