Friday, February 15, 2013

குறும்பட போட்டி

நான்காவது ஆண்டு நார்வே தமிழ் திரைப்பட விழாவில் திரையிடுவதற்கான குறும்படங்களுக்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
இந்தப் போட்டியில் பங்குபெற விரும்புவோர் இந்த பிப்ரவரி மாதம் 25-ம் தேதிக்குள் தங்களுடைய குறும்படங்கள், ஆவணப் படங்கள் மற்றும் இசை வீடியோக்களை அனுப்பி வைக்கலாம்.
இதுகுறித்து நார்வே தமிழ் திரைப்பட விழா குழு சார்பில் இன்று வெளியாகியுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :
பெருமைக்குரிய நார்வே தமிழ் திரைப்பட விழாவின் 4-ஆம் ஆண்டு குறும்பட போட்டிக்காக படங்கள், ஆவணப் படங்கள் மற்றும் இசை வீடியோக்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த நிகழ்வானது எதிர்வரும் மார்ச் மாதம் 10 தேதி ஆஸ்லோவில் உள்ள Nedre Fossum Gard -Stovner என்னும் இடத்தில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணிவரை நடக்கவிருக்கிறது.
உலகம் முழுவதும் பரந்து வாழும் கலைஞர்களிடம் இருந்து படைப்புகளை எதிர்பார்க்கிறோம்.
எமக்கு கிடைக்கபெறுகின்ற உங்கள் படைப்புகளில் இருந்து 20 குறும்படங்கள், 10 ஆவணப்படங்கள், 10 இசை காணொளிகள் (Music video) தெரிவு செய்யப்பட்டு திரையிடப்படும்.
இவற்றிலிருந்து இரண்டு குறும்படங்களுக்கு, இரண்டு ஆவணப்படங்களுக்கு, ஒரு காணொளி காட்சிக்கும் தமிழர் விருது வழங்கப்படும்.
இந்த ஆண்டின் சிறப்பம்சமாக தமிழ் சினிமா துறை தவிர்த்த கலைஞர்களிடம் இருந்து வருகின்ற சிறந்த பாடல் காட்சிகளை தேர்ந்தெடுத்து தமிழர் விருது வழங்கத் திட்டமிட்டுள்ளோம். நார்வே திரைப்பட விழாக்குழு தேர்ந்து எடுக்கும் சிறந்த 10 காணொளிகளை, வசீகரன் இசைக்கனவுகள் நிறுவனம் டிவிடி வடிவில் இந்த ஆண்டு வெளியிடவிருக்கிறது.

குறும்பட போட்டிக்கான விதிமுறைகள்:
+ தமிழ் மொழியையும், தமிழர்களுடைய கலை, கலாச்சாரத்தை அடையாள படுத்துவதாக இருக்கவேண்டும்.
+ திரைப்படத்தில் சொல்லப்படுகின்ற கருத்து தமிழ் சமூகத்தை நல்வழிப் படுத்துவதாக அமையவேண்டும்.
+ உலகத் தமிழர்களின் இன்ப, துன்பங்களைப் பேசுவதாகவும், தமிழர்களின் நியாயமான விடையங்களுக்கு பாதகமற்ற முறையில் இருக்கவேண்டும்.

+ இணையங்களில் ஏற்கெனவே வெளியான குறும்படங்களாக இருந்தால் எமது கவனத்திற்கு கொண்டு வரவேண்டும்.
+ நார்வே தமிழ் திரைப்பட விழாவிற்கு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட குறும்படங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
+ ஏற்கனவே வெளியீடு செய்யப்படாத படங்களாக இருந்தால் வரவேற்கப்படும்.
+ குறும்படங்கள் 25 நிமிடங்களுக்கும், ஆவணப்படங்கள் 60 நிமிடங்களுக்கும், காணொளி 5 நிமிடங்களுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும்.
+ குறும்படங்கள் 01.01.2012 இல் இருந்து 25.02.2013 தேதிக்கு முன் தயாரிக்கப்படாததாக இருக்கவேண்டும்.
+ அனைத்து குறும்படங்கள், ஆவணப்படங்களுக்கும் ஆங்கிலத்தில் சப் டைட்டில்கள் அவசியம்.
+ தேர்வு செய்யப்பட்ட / செய்யப்படாத படைப்புகள் எதுவும் எம்மால் திருப்பி அனுப்பி வைக்கப்படமாட்டாது.

+ படைப்புகளை அனுப்ப கடைசி தேதி 25.02,2013.

+ நடுவர் குழு பார்வைக்கான டிவிடி அல்லது புளூ ரே இரண்டு பிரதிகள் அனுப்பி வைக்கவேண்டும்.
+ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நார்வே தமிழ் திரைப்பட விழா வரும் ஏப்ரல் 24-ம் தேதி தொடங்கி, 28-ம் தேதி நிறைவடைகிறது.
மேலும் விபரங்களுக்கு http://www.ntff.no என்ற இணைய முவரிக்கு செல்லலாம்.

ஆதிபகவன் சென்ஸார்

திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகனின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஆதிபகவான் படத்தை அமீர் டைரகக் செய்துள்ளார்.
இந்தப் படத்தில் ஜெயம்ரவி ஹீரோவாகவும், நீத்து சந்திரா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். சுமார் இரண்டு ஆண்டுகளாக நீண்டகால தயாரிப்பில் இருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு ஒருவழியாக முடிந்து எடிட்டிங், டப்பிங் பணிகள் நடந்து வந்தன.
இப்போது படத்துக்கு சென்சாரில் ‘ஏ சர்டிஃபிகேட் கிடைத்திருக்கிறது.
படத்தில் கவர்ச்சிப்புயல் நீதுசந்த்ரா இருந்தும் முகம் சுழிக்க வைக்கும் கவர்ச்சி சீன்கள் வைக்காமல் போனாலும், ஸ்டண்ட் சீன்கள் அதிக ரத்தமாக இருப்பதால் சென்சார் போர்டு இந்தப்படத்துக்கு ‘A’ சர்டிஃபிகேட் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.
கடந்த சில வாரங்களாக விரைவில்... என்று தினமும் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கப்பட்டு வந்த இந்தப்படம் வருகிற 22-ஆம் தேதி ரிலீஸாகிறது. ஆனால் ‘A’ சர்டிபிகேட் வாங்கிய படத்தை சேனல்களில் ஒளிப்பரப்ப தடை இருப்பதால் படத்தின் ரிலீஸுக்குப் பிறகு மீண்டும் ஒரு சென்சார் செய்து சாட்டிலைட் ரைட்ஸை பிரபல சேனலான சன் டிவிக்கு விற்பனை செய்துவிடும் திட்டத்தில் இருக்கிறார் டைரக்டர் அமீர்.
இந்தப்படத்தை சென்ஸார் செய்வதற்கு முன்பு சன் டிவிக்கு பெரிய தொகைக்கு விற்பனை செய்ய டைரக்டர் அமீரும், தயாரிப்பாளர் ஜெ.அன்பழகனும் பேரம் பேசு வந்தது குறிப்பிடத்தக்கது.

Popular Posts