Sunday, January 15, 2012

பஞ்சாலையின் யதார்த்தமான பதிவு

பஞ்சாலைகளின் பணியாற்றும் மக்களின் யதார்த்தமான பதிவுதான் கிருஷ்ணவேணி
பஞ்சாலை படம், என்று அப்படத்தின் நாயகி நந்தனா கூறியுள்ளார். டைரக்டர்
தனபால் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படம் கிருஷ்ணவேணி
பஞ்சாலை. ஹேமச்சந்திரன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் கேரள நாயகி நந்தனா
ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
கிருஷ்ணவேணி பஞ்சாலை படம் குறித்து நடிகை நந்தனா அளித்துள்ள பேட்டியில்,
கிருஷ்ணவேணி பஞ்சாலை தமிழில் எனது முதல் படமாகும். இப்படத்தின்
இயக்குனரான தனபால் பத்மநாபன் ரொம்ப யதார்த்தமாக இப்படத்தை
எடுத்திருக்கிறார். படத்தில் எனது பெயர் பூங்கோதை. எனது தோழிகள் பூ என்று
கூப்பிடுவார்கள். பஞ்சாலையில் பணியாற்றும் மக்களின் யதார்த்தப் பதிவுதான்
இப்படம். இதில் ஒரு காதல் கதையும் இருக்கிறது. இப்படத்தின் ஹீரோவான
ஹேமச்சந்திரனுடனான லவ் கெமிஸ்ட்ரி நல்லா வந்திருக்கிறது, என்று
கூறியுள்ளார்.

திரைக்கதை தயாராயிட்டிருக்கு ! :விஷ்ணுவர்தன்

அஜீத் நடித்து இருக்கும் படம் 'பில்லா 2′. சக்ரி டொலெட்டி இயக்க, யுவன்
சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். பார்வதி ஒமணக்குட்டன் நாயகியாக
நடித்து இருக்கிறார்.
'பில்லா 2' படத்தில் மும்முரமாக நடித்து வந்ததால் அஜீத் தனது
குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முடியவில்லை. பில்லா 2 படத்தில்
அஜீத்தின் பணிகள் முடிந்த பின் குடும்பத்தினருடன் சிங்கப்பூர்சென்றார்.
சிங்கப்பூரில் இருந்து திரும்பி இருக்கும் அஜீத், தற்போது விஷ்ணுவர்தன்
படத்தில் நடிக்க இருக்கிறார்.
அஜீத் நடிக்க இருக்கும் படத்தின் கதை என்ன, யார் எல்லாம்நடிக்கிறார்கள்,
அஜீத் எந்த மாதிரி பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்பதை அறிய
விஷ்ணுவர்தனிடன் பேசியதில், அவர் "அஜீத் சாரிடம் சொன்ன ஒரு வரி கதைக்கு
திரைக்கதை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்னும்
அப்பணிகள் முடியவில்லை. அப்பணிகள் எல்லாம் முடிந்தால் தான் அந்தந்த
பாத்திரத்திற்கு யார் பொருந்துவார் தீர்மானிக்கப்படும் அதன் பிறகே அடுத்த
கட்ட பணிகள் துவங்கும்.
அதற்குள் பல்வேறு விதமாக செய்திகள் உலா வருகின்றன. எதிலும் உண்மையில்லை.
திரைக்கதைஅமைக்கும் பணி இறுதிகட்டத்தில் இருக்கிறது. அது முடிந்தால் தான்
மற்றவைகளில் கவனம் செலுத்துவோம்." என்றார்.
அஜீத் ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்றதற்கு " நீங்கள்
எனது படத்தில் வித்தியாசமான தலயை பார்க்க இருக்கிறீர்கள் என்பது மட்டும்
உறுதி " என்று சொல்லி தன் வழக்கமான் சிரிப்பால் ஃபினிஷிங் டச்
கொடுத்தார்.

அடுத்த ரவுண்டுக்கு ரெடி ! : தமன்னா

தமிழ் திரையுலகிற்கு 'கேடி' படத்தின் மூலம் அறிமுகமானவர் தமன்னா. அப்படம்
மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெறவில்லை. அதன் பின்னர் அவர் நடித்த சில
படங்களும் அவருக்கு பெயர் சொல்லும்படியாக அமையவில்லை.
பின்னர் கல்லூரி, அயன், கண்டேன் காதலை, சுறா, பையா, படிக்காதவன்,
சிறுத்தை என இவர் நடித்த பல படங்கள் வரவேற்பை பெற்றன.
நடிவில் தெலுங்கு திரையுலகிலும் பல்வேறு நல்ல வாய்ப்புகள் வந்ததால்
தெலுங்கு திரையுலகில் அதிக கவனம் செலுத்தஆரம்பித்தார். தெலுங்கில் இவர்
நடிப்பில் வெளிவந்த பல படங்கள் வரவேற்பை பெற்றன.
தெலுங்கு திரையுலகில் தற்போது இவர் கொடுத்து இருக்கும் கால்ஷீட் தேதிகள்
வரும் ஏப்ரல் மாதத்தோடு முடிகிறதாம். இதனால் மீண்டும் தமிழ் திரையுலகில்
வலம் வர திட்டமிட்டிருக்கிறாராம் தமன்னா.
அதனால் பல்வேறு நடிகைகளின் மேனேஜர்களிடம் தயாரிப்பு நிர்வாகிகளிடமும்
தமிழ் திரையுலகில் தன் அடுத்த சுற்று பற்றி பேசி வருகிறாராம்.
எந்த இயக்குனர் தன் படத்தில் நடிக்க தமன்னாவை ஒப்பந்தம் செய்யப் போகிறார்
என்பது இன்னும் சில வாரங்களில் தெரியும்.

நடுரோட்டில் ஆட்டம் போட்ட விமல்

டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வெற்றி பெற்ற பசங்க படத்தின்
மூலம் பேசப்பட்ட நடிகர் விமல், பாண்டிராஜின் புதிய படமான மெரினாவுக்காக
நடுரோட்டில் ஆட்டம் போட்டுள்ளார். பசங்க புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில்
படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கும் டைரக்டர் பாண்டியராஜ்,
மெரினா படத்தை தயாரித்து இயக்குகிறார். முழுக்க முழுக்க மெரினா
கடற்கரையையும், அங்கு சுற்றித்திரியும் சிறுவர்களைப்பற்றியுமானது
இப்படத்தின் கதை. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை மெரினா
கடற்கரையிலேயே நடத்தினார் பாண்டிராஜ்.
தனது புதிய படம் பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், பசங்க புரொடக்ஷன்ஸ்
என்ற பெயரில் படக்கம்பெனி தொடங்கி மெரினா படத்தை நானே தயாரிக்கிறேன்.
வெறும் ஒரு லட்சம் ரூபாயை வைத்துக் கொண்டு தயாரிப்பில் இறங்கி விட்டேன்.
திரை மறைவில் நிறைய பேர் உதவுகிறார்கள். மெரினா
படத்தில்சிவகார்த்திகேயன், ஓவியா ஜோடியாக நடிக்கின்றனர். மெரினா
கடற்கரையில் திரியும் சிறுவர்கள் பற்றிய கதை. ஒவ்வொரு குழந்தைக்கும்
கல்வி முக்கியம் என்பதை படத்தில் வலியுறுத்தியுள்ளேன்.
பட்டினப்பாக்கத்தில் இருந்து காசிமேடு வரை கடற்கரை பகுதியில்படப்பிடிப்பு
நடத்தி உள்ளோம். வணக்கம் வாழ வைக்கும் சென்னை… எனத் தொடங்கித் தொடரும்
பாடலை வித்தியாசமாக எடுத்துள்ளோம். விக்ரம் பாடி கொடுத்தார். விமலை
ரோட்டில் ஆட வைத்து எடுத்தோம். சசிகுமார், சினேகா போன்றோரும் ஆடி
உள்ளனர்.
என்னை பந்தா இயக்குனர் என்று விமர்சிக்கிறார்கள். மூன்று படங்கள்
எடுத்தும் இப்போதும் பைக்கில்தான் வருகிறேன். நான் பந்தா செய்வது இல்லை.
இன்னும் பத்து படங்கள் இயக்கினாலும் பசங்க படத்தில் இருந்த
மாதிரியேஇருப்பேன். எவ்வளவு புகழ் வந்தாலும் எனக்கு பந்தா வராது.
வெயிலில் தொப்பிகூட போடாமல் தான் படப்பிடிப்பை நடத்துகிறேன், என்று
கூறியுள்ளார்.

முதல் இடத்தை பிடிக்க ஆசை – காஜல் அகர்வால்

மாற்றான் படத்தில் பிசியாக இருக்கும் காஜல் அகர்வால் விஜய்யின்
துப்பாக்கி படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். காஜல்அகர்வாலும் அவரது தங்கை
நிஷா அகர்வாலும் குடும்பத்தினருடன் திருப்பதி கோவிலுக்கு வந்தனர். அங்கு
சாமி தரிசனம் செய்தனர் அப்போது ரசிகர்களிடம் இருந்து
போலீசார்பாதுகாப்பாக அழைத்து சென்று காரில் ஏற்றி அனுப்பினர். அப்போது
காஜல் அகர்வால் நிருபர்களுக்கு அளித்த போட்டியில்,
எனக்கு பிடித்த கடவுள் திருப்பதி வெங்கடாஜலபதி. குடும்பத்தினருடன் இன்று
தரிசனம் செய்தேன். சாமியிடம் என்ன வேண்டினேன் என்பதை வெளிப்படையாக சொல்ல
முடியாது. திருப்பதிக்கு வர ரொம்ப நாட்களாக முயற்சி செய்தேன். இப்போது
தான் வர முடிந்தது. சினிமாவில் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்று தான்
ஒவ்வொரு நடிகையும் ஆசைப்படுகின்றனர். எனக்கும் அந்த ஆசை இருக்கிறது.
முதல் இடத்தை பிடிக்க கடவுளிடம் வேண்டினேனா என்று சொல்ல முடியாது.
கடவுளிடம் கேட்டதை வெளியே சொன்னால் பலிக்காது என்றார்.

ஓவியா இயற்கையிலேயே ரொம்ப அழகு- – பசங்க பாண்டிராஜ்

நடிகை ஓவியாக இயற்கையிலேயே ரொம்ப அழகு என்று டைரக்டர் பாண்டிராஜ்
கூறியுள்ளார். பசங்க, வம்சம் படங்களைத் தொடர்ந்து டைரக்டர் பாண்டிராஜ்
இயக்கியிருக்கும் புதிய படம் மெரினா. முழுக்க முழுக்க சென்னை கடற்கரை
சிறுவர்களின் பின்னால் உள்ள கதைதான் இப்படத்தின் மொத்தகளமும்.
படத்தின் நாயகனாக சின்னத்திரை புகழ் சிவகார்த்திகேயனும், நாயகியாக நடிகை
ஓவியாவும் நடித்துள்ளனர். ஓவியா பற்றி பாண்டிராஜ் அளித்துள்ள பேட்டியில்,
"ஓவியா பொதுவாகவே மேக்கப் பிரியை. எப்போதும் மேக்கப் மயம்தான். என்
படங்களின் ஹீரோயின்களுக்கு மேக்கப் போட விடவே மாட்டேன். ஓவியா
இயற்கையிலேயே அழகானவர்தான். பெண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள்.
அவர்களுக்கு மேக்கப் அவசியமில்லை. ஆனால் இந்தப் படத்துக்காக
விட்டுவிட்டேன். என்று கூறியுள்ளார்.

த்ரிஷா, தமன்னாவுடன்- விதார்த்தின் ஆசை

த்ரிஷா, தமன்னாவுடன் ஜோடி போட்டு நடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாக
கூறியிருக்கிறார் நடிகர் விதார்த். கொள்ளைக்காரன் படம் ரிலீசான
மகிழ்ச்சியில் இருக்கும் விதார்த், தனது வருங்கால திட்டம் மற்றும் ஆசைகளை
கூறியிருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில். எனக்கு த்ரிஷா, தமன்னா
போன்ற நடிகைகளுடன் ஜோடி போட்டு நடிக்கஆசையாக இருக்கிறது. ஆனால் அதெல்லாம்
தானாக நடக்கும் என்கிற நம்பிக்கை என்னிடம் இருக்கிறது, என்று
கூறியுள்ளார்.
மைனா என்ற வெற்றிப்படத்தில் நடித்த பிறகும் விதார்த் இன்னமும்
யதார்த்தமான நாயகனாகவே ரியல் லைப்பிலும் இருக்கிறாராம். கதை சொல்ல வரும்
புதுமுக இயக்குனர்கள் கூட, அவர் கால்ஷீட் கொடுக்கவில்லை என்றாலும்
பரவாயில்லை, மனசு கோணாமல் நடந்து கொண்டார். நம்மையும் மதித்து கதை
கேட்டார், என்று திரையுலகைச் சேர்ந்த பலரும் விதார்த்தை பாராட்டி
வருகிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

Popular Posts