Monday, September 17, 2012

கணவர் மீது சித்ரவதை புகார்: யுக்தாமுகி விவாகரத்து?

கணவர் மீது சித்ரவதை புகார்: யுக்தாமுகி விவாகரத்து? கணவர் மீது சித்ரவதை புகார்: யுக்தாமுகி விவாகரத்து?
கணவர் மீது சித்ரவதை புகார்: யுக்தாமுகி விவாகரத்து?

பிரபல இந்தி நடிகை யுக்தாமுகி இவர் தமிழில் பூவெல்லாம் உன் வாசனம் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். யுக்தாமுகி 1999-ல் உலக அழகி பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கும் நாக்பூரைச் சேர்ந்த ஓட்டல் அதிபர் பிரின்ஸ்டுலிக்கும் 2008-ல் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு கன் வால்முகி என்ற குழந்தை உள்ளது. சந்தோஷமாக சென்ற அவர்கள் குடும்ப வாழ்க்கையில் திடீர் புயல் வீச ஆரம்பித்துள்ளது. கணவர் பிரின்ஸ்டுலி மீது யுக்தாமுகி மும்பை போலீசில் பரபரப்பான புகார் அளித்தார். கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக புகாரில் தெரிவித்து இருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இருவருக்கும் ஓரிரு மாதங்களுக்கு முன்பே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் தற்போது பிரிந்து வாழ்வதாகவும் நெருக்கமானவர்கள் கூறினர். மத்தியஸ்தர்கள் மூலம் சமரச முயற்சி நடந்து அதுவும் தோல்வி அடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கணவரை விவாகரத்து செய்ய யுக்தாமுகி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்வது குறித்து வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறாராம்.

இந்த ஆண்டில் இதுவரை 104 படங்கள் ரிலீஸ்: வசூல் ஈட்டிய டாப் 10 படங்கள்

இந்த ஆண்டில் இதுவரை 104 படங்கள் ரிலீஸ்: வசூல் ஈட்டிய டாப் 10 படங்கள்

இந்த ஆண்டு தமிழில் கடந்த ஆகஸ்டு மாதம் வரை முகமூடியை சேர்த்து 100 படங்கள் வரை வந்தன. தொடர்ந்து இம்மாதம் மன்னாரு, சுந்தரபாண்டியன், பாகன், படங்கள் வந்துள்ளன. இதில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படம் 150 நாட்களை தாண்டி ஓடி பெரும் தொகை லாபம் ஈட்டியுள்ளது.

தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளில் வந்த நான் ஈ படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 15 கோடிக்கு மேல் வசூல் பார்த்துள்ளது. தெலுங்கில் ரூ.75 கோடி ஈட்டியுள்ளது. இந்த படம் ரூ. 40 கோடி செலவில் எடுக்கப்பட்டது. வசூல் ரூ.100 கோடியை தாண்டும் என்கின்றனர்.

லிங்குசாமி இயக்கத்தில் வந்த வேட்டை படமும் லாபம் சம்பாதித்தது. இதில் ஆர்யா, மாதவன், அமலாபால், சமீரா ரெட்டி இணைந்து நடித்து இருந்தனர், இந்த படத்தை இந்தியிலும் ரீமேக் செய்திருந்தார்கள்.

விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்த நண்பன் படமும் வசூல் பார்த்தது. ஷங்கர் இயக்கியிருந்தார். ரூ. 1 கோடி செலவில் எடுத்த மெரீனா படம் ரூ. 3 கோடி லாபம் சம்பாதித்தது. அம்புலி 3டி படமும் ரூ. 4 கோடி வசூல் ஈட்டியது. இதனை ரூ. 2 கோடி செலவில் எடுத்து இருந்தனர்.

கலகலப்பு, காதலில் சொதப்புவது எப்படி, அட்டகத்தி படங்கள் நன்றாக ஓடின. வழக்கு எண் 18/9, கழுகு, உருமி, நான் படங்களும் பேசப்பட்டன. பில்லா 2, தோனி, 3, சகுனி, முகமூடி படங்கள் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டன. ஆனால் இவற்றில் சில படங்கள் வசூலில் திருப்தி அளிக்கவில்லை என்கின்றனர். பல படங்கள் நஷ்டத்தை சந்தித்து உள்ளன.

நான் எந்த நடிகைக்கும் போட்டியில்லை: ஓவியா

நான் எந்த நடிகைக்கும் போட்டியில்லை: ஓவியா நான் எந்த நடிகைக்கும் போட்டியில்லை: ஓவியா
நான் எந்த நடிகைக்கும் போட்டியில்லை: ஓவியா

'சில்லுன்னு ஒரு சந்திப்பு' படத்தில் விமல் ஜோடியாக நடிக்கிறார் ஓவியா. எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இப்படத்தை ஆர்.ரவிலல்லின் இயக்குகிறார். இதில் 'பஸ்ஸே பஸ்ஸே' என்று தொடங்கும் பாடலை விமல் பாடியுள்ளார். இதன் வெளியீட்டு விழா நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

இதில் பங்கேற்ற நடிகை ஓவியா நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ் படங்களில் தொடர்ந்து நடிப்பேன். இங்குள்ள ரசிகர்கள், நடிகர்-நடிகைகளிடம் மிகுந்த அன்பு காட்டுகிறார்கள். 'Òகலகலப்பு' படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடித்தேன். படத்துக்கு தேவையாக இருந்ததால் அப்படி நடித்தேன். அதை ரசிகர்கள் வரவேற்றார்கள்.

'கலகலப்பு' படத்தில் நடித்தபோது எனக்கும் அஞ்சலிக்கும் போட்டி ஏற்பட்டதாக கிசுகிசுக்கள் பரவி உள்ளன. நான் எந்த நடிகைக்கும் போட்டி இல்லை. எனக்கு நானே போட்டியாக இருக்கிறேன்.

'சில்லுன்னு ஒரு சந்திப்பு' படத்தில் விமலுடன் நடிக்கிறேன். இது அவருடன் நான் நடிக்கும் 3-வது படம். இதில் மாணவி கேரக்டரில் நடிக்கிறேன். தொடர்ந்து 'மூடர் கூடம்' என்ற படத்தில் நடிக்க உள்ளேன். மலையாள படங்களில் நடிக்கவும் பேசி வருகிறேன. தமிழில் நிறைய படங்கள் வந்தால் சென்னையில் வீடு பார்த்து குடியேறுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Popular Posts