Wednesday, March 27, 2013

கெளதம் ஐஸ்வர்யா இணையும் புதிய படம்

 இணையும் புதிய படம்
கெளதம் வசம் இப்போது டஜன் கணக்கில் பட வாய்ப்புகள் உள்ளதாம்.
அப்படி ஒரு புதிய வாய்ப்பு ரஜினி மகள் ஐஸ்வர்யாவிடமிருந்தும் அவருக்கு வந்திருக்கிறது. ஆமாம், தனது கணவரும் நடிகருமான தனுஷை வைத்து 3 என்ற படத்தை டைரக்ட் செய்த ஐஸ்வர்யா தனது அடுத்த படத்தில் ஹீரோவாக கெளதம் கார்த்திக்கை நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறாராம்.
3 படம் எதிர்ப்பார்த்த அளவுக்கு சரியாகப் போகவில்லை என்றாலும் அந்தப்படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி என்ற பாடல் ஐஸ்வர்யாவுக்கு டைரக்டர் என்ற அங்கீகாரத்தையும், நல்ல பெயரையும் புகழையும் சம்பாதித்துக் கொடுத்தது.
அந்தப்படத்தை தொடர்ந்து தனது அடுத்த படம் குறித்து இதுவரை எதையும் வெளியில் சொல்லாமல் இருந்த ஐஸ்வர்யா, தற்போது கார்த்திக் மகன் கெளதம் கார்த்தியை வைத்து அடுத்த படத்தை டைரக்ட் செய்யத் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக சமீபத்தில் கெளதமை நேரில் சந்தித்து இதுகுறித்துப் பேசியிருக்கிறாராம் ஐஸ்வர்யா. வழக்கம் போல இந்தப் படத்துக்கும் அனிருத் தான் மியூசிக் டைரக்டர்.படத்தின் ஹீரோயின் யார் என்ற தகவல் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

0 comments:

Post a Comment

Popular Posts