Monday, February 18, 2013

Actress hot scene still

Actress hot scene still

Avalukku kirukku

Very very hot and sexy still

Friday, February 15, 2013

குறும்பட போட்டி

நான்காவது ஆண்டு நார்வே தமிழ் திரைப்பட விழாவில் திரையிடுவதற்கான குறும்படங்களுக்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
இந்தப் போட்டியில் பங்குபெற விரும்புவோர் இந்த பிப்ரவரி மாதம் 25-ம் தேதிக்குள் தங்களுடைய குறும்படங்கள், ஆவணப் படங்கள் மற்றும் இசை வீடியோக்களை அனுப்பி வைக்கலாம்.
இதுகுறித்து நார்வே தமிழ் திரைப்பட விழா குழு சார்பில் இன்று வெளியாகியுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :
பெருமைக்குரிய நார்வே தமிழ் திரைப்பட விழாவின் 4-ஆம் ஆண்டு குறும்பட போட்டிக்காக படங்கள், ஆவணப் படங்கள் மற்றும் இசை வீடியோக்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த நிகழ்வானது எதிர்வரும் மார்ச் மாதம் 10 தேதி ஆஸ்லோவில் உள்ள Nedre Fossum Gard -Stovner என்னும் இடத்தில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணிவரை நடக்கவிருக்கிறது.
உலகம் முழுவதும் பரந்து வாழும் கலைஞர்களிடம் இருந்து படைப்புகளை எதிர்பார்க்கிறோம்.
எமக்கு கிடைக்கபெறுகின்ற உங்கள் படைப்புகளில் இருந்து 20 குறும்படங்கள், 10 ஆவணப்படங்கள், 10 இசை காணொளிகள் (Music video) தெரிவு செய்யப்பட்டு திரையிடப்படும்.
இவற்றிலிருந்து இரண்டு குறும்படங்களுக்கு, இரண்டு ஆவணப்படங்களுக்கு, ஒரு காணொளி காட்சிக்கும் தமிழர் விருது வழங்கப்படும்.
இந்த ஆண்டின் சிறப்பம்சமாக தமிழ் சினிமா துறை தவிர்த்த கலைஞர்களிடம் இருந்து வருகின்ற சிறந்த பாடல் காட்சிகளை தேர்ந்தெடுத்து தமிழர் விருது வழங்கத் திட்டமிட்டுள்ளோம். நார்வே திரைப்பட விழாக்குழு தேர்ந்து எடுக்கும் சிறந்த 10 காணொளிகளை, வசீகரன் இசைக்கனவுகள் நிறுவனம் டிவிடி வடிவில் இந்த ஆண்டு வெளியிடவிருக்கிறது.

குறும்பட போட்டிக்கான விதிமுறைகள்:
+ தமிழ் மொழியையும், தமிழர்களுடைய கலை, கலாச்சாரத்தை அடையாள படுத்துவதாக இருக்கவேண்டும்.
+ திரைப்படத்தில் சொல்லப்படுகின்ற கருத்து தமிழ் சமூகத்தை நல்வழிப் படுத்துவதாக அமையவேண்டும்.
+ உலகத் தமிழர்களின் இன்ப, துன்பங்களைப் பேசுவதாகவும், தமிழர்களின் நியாயமான விடையங்களுக்கு பாதகமற்ற முறையில் இருக்கவேண்டும்.

+ இணையங்களில் ஏற்கெனவே வெளியான குறும்படங்களாக இருந்தால் எமது கவனத்திற்கு கொண்டு வரவேண்டும்.
+ நார்வே தமிழ் திரைப்பட விழாவிற்கு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட குறும்படங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
+ ஏற்கனவே வெளியீடு செய்யப்படாத படங்களாக இருந்தால் வரவேற்கப்படும்.
+ குறும்படங்கள் 25 நிமிடங்களுக்கும், ஆவணப்படங்கள் 60 நிமிடங்களுக்கும், காணொளி 5 நிமிடங்களுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும்.
+ குறும்படங்கள் 01.01.2012 இல் இருந்து 25.02.2013 தேதிக்கு முன் தயாரிக்கப்படாததாக இருக்கவேண்டும்.
+ அனைத்து குறும்படங்கள், ஆவணப்படங்களுக்கும் ஆங்கிலத்தில் சப் டைட்டில்கள் அவசியம்.
+ தேர்வு செய்யப்பட்ட / செய்யப்படாத படைப்புகள் எதுவும் எம்மால் திருப்பி அனுப்பி வைக்கப்படமாட்டாது.

+ படைப்புகளை அனுப்ப கடைசி தேதி 25.02,2013.

+ நடுவர் குழு பார்வைக்கான டிவிடி அல்லது புளூ ரே இரண்டு பிரதிகள் அனுப்பி வைக்கவேண்டும்.
+ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நார்வே தமிழ் திரைப்பட விழா வரும் ஏப்ரல் 24-ம் தேதி தொடங்கி, 28-ம் தேதி நிறைவடைகிறது.
மேலும் விபரங்களுக்கு http://www.ntff.no என்ற இணைய முவரிக்கு செல்லலாம்.

ஆதிபகவன் சென்ஸார்

திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகனின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஆதிபகவான் படத்தை அமீர் டைரகக் செய்துள்ளார்.
இந்தப் படத்தில் ஜெயம்ரவி ஹீரோவாகவும், நீத்து சந்திரா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். சுமார் இரண்டு ஆண்டுகளாக நீண்டகால தயாரிப்பில் இருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு ஒருவழியாக முடிந்து எடிட்டிங், டப்பிங் பணிகள் நடந்து வந்தன.
இப்போது படத்துக்கு சென்சாரில் ‘ஏ சர்டிஃபிகேட் கிடைத்திருக்கிறது.
படத்தில் கவர்ச்சிப்புயல் நீதுசந்த்ரா இருந்தும் முகம் சுழிக்க வைக்கும் கவர்ச்சி சீன்கள் வைக்காமல் போனாலும், ஸ்டண்ட் சீன்கள் அதிக ரத்தமாக இருப்பதால் சென்சார் போர்டு இந்தப்படத்துக்கு ‘A’ சர்டிஃபிகேட் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.
கடந்த சில வாரங்களாக விரைவில்... என்று தினமும் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கப்பட்டு வந்த இந்தப்படம் வருகிற 22-ஆம் தேதி ரிலீஸாகிறது. ஆனால் ‘A’ சர்டிபிகேட் வாங்கிய படத்தை சேனல்களில் ஒளிப்பரப்ப தடை இருப்பதால் படத்தின் ரிலீஸுக்குப் பிறகு மீண்டும் ஒரு சென்சார் செய்து சாட்டிலைட் ரைட்ஸை பிரபல சேனலான சன் டிவிக்கு விற்பனை செய்துவிடும் திட்டத்தில் இருக்கிறார் டைரக்டர் அமீர்.
இந்தப்படத்தை சென்ஸார் செய்வதற்கு முன்பு சன் டிவிக்கு பெரிய தொகைக்கு விற்பனை செய்ய டைரக்டர் அமீரும், தயாரிப்பாளர் ஜெ.அன்பழகனும் பேரம் பேசு வந்தது குறிப்பிடத்தக்கது.

Friday, February 8, 2013

அனுஷ்காவின் ருத்ர மாதேவி

அனுஷ்காவின் ருத்ர மாதேவி

அனுஷ்காவின் ருத்ர மாதேவி க்காக மீண்டும் சிம்பொனி இசைக்கும் இளையராஜா!

மிழ்,தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் டஜன் கணக்கில் படங்களை வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து அனுஷ்காவின் புதிய படத்தில் இசைஞானி இளையராஜ மீண்டும் சிம்பொனி இசைக்குழுவுடன் இணைந்து இசையமைக்க உள்ளார்.

1998 ஆம் ஆண்டில் ரிலீஸான ராமாயாணம், ஒக்கடு, மனோகரம் ஆஙிய தெலுங்கு வெற்றிப் படங்களையும் தந்த பிரபல டைரக்டர் குணசேகரன் ஏராளமான பொருட்செலவில் தெலுங்கில் டைரக்ட் செய்து தயாரித்து வரும் சரித்திரப்படம் தான் ‘ருத்ரமா தேவி’.
இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்காக மீண்டும் லண்டனைச் சேர்ந்த சிம்பொனி இசைக்குழுவுடன் இணைய உள்ளார் ‘இசைஞானி’ இளையராஜா.
மேலும் ஏற்கனவே இந்தப்படத்தில் இடம்பெறும் ஆறு சூப்பர்ஹிட் பாடல்களையும் கம்போஸ் செய்து விட்ட இசைஞானி விரைவில் லண்டனில் உள்ள சிம்போனி ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் எல்லா பாடல்களும் ரெக்கார்ட் செய்யப்பட இருப்பதாக படத்தின் டைரக்டரும், தயாரிப்பாளருமான குணசேகரன் தகவல் வெளியிட்டுள்ளார்.
பொதுவாக எந்த படத்துக்கும் அதிகபட்சம் 20 நாட்களுக்கு மேல் கால்ஷீட் கொடுக்காத அனுஷ்கா இந்தப்படத்துக்காக மட்டுமே சுமார் 90 நாட்களுக்கும் மேல் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, February 7, 2013

பவர்ஸ்டாருக்கு போட்டியா? திருமதி தமிழ் 400 தியேட்டர்களில்

மிழ்சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வந்து கொண்டிருந்த தேவயானியை திருமணம் செய்து கொண்ட பிறகு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி விட்ட டைரக்டர் ராஜகுமாரன் மிக நீண்ட இடைவெளிக்குப்பிறகு ‘திருமதி தமிழ்’ என்ற பெயரில் ஒரு படத்தை டைரக்ட் செய்து வருகிறார்.
பவர்ஸ்டாருக்கெல்லாம் தியேட்டருக்கு கூட்டம் வரும்போது தான் நடித்தால் ரசிகர்கள் பார்க்க மாட்டார்களா.. என்ன, என்று நினைத்தாரோ என்னவோ? அவர் தான் இந்தப்படத்தில் ஹீரோவாக அவதாரமெடுத்திருக்கிறார். ஹீரோயினாக அவரது குடும்ப இஸ்த்ரி தேவயானி நடித்திருக்கும் இந்தப்படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷனை சமீபத்தில் தான் சென்னையிலுள்ள உட்லண்ட் தியேட்டரில் மிகப்பிரம்மாண்டமாக நடத்தி அசத்தினார் ராஜகுமாரன்.
அதுமட்டுமில்லாமல் படம் சம்பந்தப்பட்ட புகைப்படங்களையும், அதன் டீசரையும் பார்த்தவர்கள் ராஜகுமாரனின் ஆக்‌ஷன், ரியாக்‌ஷன்களைப் பார்த்து மெய் மறந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள் காரணம் அந்தளவுக்கு படத்தில் அவர் இஷ்டத்துக்கு செய்திருக்கும் மூவ்மெண்ட்டுகள் எல்லாமே பவர் ஸ்டாரையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு செம காமெடியாக உள்ளதாம். குறிப்பாக படத்தின் டீசரில் அவருடைய டயலாக் பேசும் மாடுலேஷன்களும்,ஆக்‌ஷன் சீன்களும் இவர் தான் பவர்ஸ்டாருக்கு சரியான போட்டி என்று சொல்லும் அளவுக்கு களைகட்டியிருக்கிறது.
இதனால் இந்த ‘திருமதி தமிழ்’ படத்துக்கு இப்போதே ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ பட ரேஞ்சில் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. அது உண்மைதான் என்பது போல இந்தப் படத்தை ராஜகுமாரன் சுமார் 400 க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய ப்ளான் பண்ணி வருகிறாராம். பவர்ஸ்டார் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் கூட 200 தியேட்டர்களில் தான் ரிலீஸாகியிருந்தது, ஆனால் இந்தப்படத்தை அதைவிட அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்வேன் என்று ராஜகுமாரன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் இந்தப்படம் எனக்கு நிச்சயமாக வெற்றிப்படமாக அமையும் என்றும் அசராமல் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் ராஜகுமாரன்.

Tuesday, November 6, 2012

சோகத்தில் இருந்து மீண்டு வந்தார் த்‌ரிஷா!

சோகத்தில் இருந்து மீண்டு வந்தார் த்‌ரிஷா!
Trisha-in-JFW-Magazine-New-Photoshoot-3
தந்தையின் திடீர் மரணம் காரணமாக ஹைதராபாத் சென்ற த்‌ரிஷா அந்த சோகத்திலிருந்து இன்னும் மீளவில்லை. என்றாலும் கடமை அழைக்கிறது.
சமர், என்றென்றும் புன்னகை, பூலோகம் என தமிழில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். இதில் சமர் சூப்பர் சீனியர். விஷால் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு த்‌ரிஷாவுக்காக காத்திருக்கிறது. அவர் வந்தால் மலேசியா சென்று பாடல் காட்சிகளை முடிக்கலாம் என்றிருக்கிறார் இயக்குனர் திரு.
அதேபோல் மற்ற இரு படங்களும்.
சீனியா‌ரிட்டி அதிகம் சமர் என்பதால் அதற்கே முக்கியத்துவம் தரயிருக்கிறார். அடுத்து பூலோகம் அதையடுத்து என்றென்றும் புன்னகை.

அனுஷ்காவை அதிரவைத்த ரசிகர்கள்!


anusha1
"ரெண்டு" படத்தில் மாதவன் ஜோடியாக அறிமுகமானவர் அனுஷ்கா. முதல் படம் சொல்லும் படி இல்லை என்ற போதிலும், அருந்ததி படம் அனுஷ்காவுக்கு பெரிய என்ட்ரியை கொடுத்தது. எந்த வேடமாக இருந்தாலும், அனுஷ்காவால் நடிக்க முடியும். திறமையான நடிகை என்று நிரூபித்த பின்னரும் இயக்குனர்கள் பலரும் ஹீரோவுடன் டூயட் பாடுவதற்கு மட்டும் அனுஷ்காவை உபயோகப்படுத்துகின்றனர். எனினும் அனுஷ்காவுக்கு என்று தனிப்பட்ட ரசிகர்கள் உண்டு.
சமீப காலமாக அனுஷ்காவின் ரசிகர்கள் பலரும் காஜல் அகர்வால், சமந்தா போன்றோர் பக்கம் பார்வையைத் திருப்பி இருக்கின்றனர். இதற்கு அனுஷ்கா நடித்து வெளியான தாண்டவம் படமும் ஒரு காரணம். தாண்டவம் படத்தில் அனுஷ்காவுக்கு சில காட்சிகளே ஒதுக்கப்பட்டிருந்தன. அனுஷ்காவிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு தாண்டவம் படம் திருப்தி அளிக்கவில்லை.
அனுஷ்காவின் ரசிகர்களில் சிலர், தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை ட்விட்டர் மூலம் அனுஷ்காவுக்கே தெரியப்படுத்தி வருகின்றனர். இதனால் அதிர்ந்து போயிருக்கும் அனுஷ்கா, இரண்டாம் உலகம் படத்தில் இரண்டு வித்தியாசமான கெட்டப்களில் நடித்திருக்கிறேன். அது உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று பதிலளித்து வருகிறார்.

Popular Posts