Wednesday, November 23, 2011

ஆடுகளம் நாயகி டப்ஸிக்கு கல்யாணம்

 
 
 
ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தன் முத்திரையை பதித்த நடிகை டப்ஸி. இவரது அழகும், நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
 
 
இவர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு காலத்தில் ஐ.டி ஊழியராக இருந்த டப்ஸியின் வாழ்க்கையை மாடலிங் மாற்றியது. மாடலிங் மூலம் தான் டப்ஸி திரையுலகுக்கு அறிமுகம் செய்யப்பட்டார். அவரது அழகுக்கு கிடைத்த வாய்ப்பை டப்ஸி தன் நடிப்பின் மூலம் நிலைப்படுத்திக் கொண்டார்.
 
 
 
 
தன் திருமணத்தை பற்றி டப்ஸி , "திருமண வயதில் பெண்களுக்கு வருவது போல,
 
என் வாழ்க்கைத் துணையாக வரப் போகிறவரை பற்றிய கனவு எனக்கும் உண்டு. என் திருமணம் எப்பொழுது நடக்கும் என்று தெரியவில்லை.
 
ஆனால் நான் யோசித்து வைத்திருக்கும் தகுதிகளோடு ஒருவரை எப்பொழுது சந்திக்கிறேனோ அப்பொழுதே என் திருமணம் நடைபெறும்.
 
என் திருமணம் கண்டிப்பாக மாபெரும் விழாவாக நடக்காது.
 
என்னால் முடிந்த வரை சாதாரணமாக நடத்துவேன். ஒருவேலை சார் பதிவாளர் அலுவலகத்தில் கூட நடக்கலாம். அதுவும் என் குறிப்பிட்ட நண்பர்கள் முன்னிலையில்." என்று அவரது தமிழில் சொல்லி சிறிது புன்னகையை சிதற விட்டார் என்று சொல்கிறது அவரது நெருங்கிய வட்டாரம்.
 
 
இந்த வருடம் நடிகைகளின் திருமண வருடமாக உள்ளது. இந்த திருமணங்களுக்கான காரணம் புதுமுக நடிகைகளின் படையெடுப்பும் அவர்களுக்கு திரையுலகில் அளிக்கப்படும் வரவேற்ப்பும், அவர்களது திறமையான நடிப்பும் கூட காரணமாக கூட இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.



0 comments:

Post a Comment

Popular Posts