Wednesday, September 19, 2012

விநாயகர் சதுர்த்தி விழாவில் திரிஷா, பிரியாமணி

விநாயகர் சதுர்த்தி விழாவில் திரிஷா, பிரியாமணி விநாயகர் சதுர்த்தி விழாவில் திரிஷா, பிரியாமணி
விநாயகர் சதுர்த்தி விழாவில் திரிஷா, பிரியாமணி

நடிகர், நடிகைகள் வீடுகளிலும், படப்பிடிப்பு தளங்களிலும் விநாயகர் சதுர்த்தியை இன்று கொண்டாடினர். விநாயகர் சிலைக்கு பூஜை செய்து வழிபட்டார்கள். இனிப்பு பண்டங்கள் செய்தும் சாப்பிட்டனர்.

பிரியாமணி கூறும்போது, எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் விநாயகர் அருள் நிறைய வேண்டும் என்றார். திரையுலகில் மேலும் வளரவேண்டும். தடைகள் விநாயகர் அருளால் அகல வேண்டும் என்றும் கூறினார்.

நடிகை திரிஷா கூறும் போது, விநாயகர் சதுர்த்தியில் எனது தாயும், பாட்டியும் வீட்டில் பூஜை செய்வார்கள். குடும்பத்தினருடன் கொண்டாடுவோம். என் பாட்டி கொழுக்கட்டை செய்வார். விசேஷ உணவுகளும் சமைப்பார்கள். விநாயகர் சதுர்த்தியில் சென்னையில் ஜீவாவுடன் 'என்றென்றும் புன்னகை' படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறேன் என்றார்.

ஹன்சிகா மோத்வானி கூறுகையில், விநாயகர் சதுர்த்தி எனக்கு பிடித்தமான பண்டிகை என்றார். ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தியை சந்தோஷமாக எதிர்பார்ப்பேன். என் வாழ்க்கையில் வெற்றி கிட்ட விநாயகர் அருள் வேண்டுகிறேன் என்றார்.

Tuesday, September 18, 2012

காதல் வந்தால் சொல்லி அனுப்பு

No need for a Taj to show your love!
No Need A Taj Show Your Love

காதல் வந்தால் சொல்லி அனுப்பு... இது கவிஞர் ஒருவர் பாடிய பாட்டு. காதல் வரும் என்று காத்திருப்பவர்களுக்கு இந்தப் பாட்டு ஓ.கேதான். அதாவது காதல் வரும்போது சொல்லி அனுப்புத்தா, அதுவரை காத்திருக்கேன் என்று மகா பொறுமை காக்கும் பார்ட்டிகளுக்காக இந்தப் பாட்டு.

அப்புறம், இன்னொரு பாட்டு இருக்கிறது...

தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே.
காடு மலை நதிகள் எல்லாம் காதலின் சின்னமே...

இதில் முதல் வகையை பொறுமை சாலிகள் கிளப்பில் சேர்க்கலாம். இந்த 2வது பாடலுக்குரிய காதலர்களை பாசிட்டிவ் மைன்ட்செட் உள்ள குரூப்பில் கோர்த்து விடலாம்.

இந்த பாசிட்டிவ் பார்ட்டிகள்தான் வாழ்க்கையில் ஜெயிப்பவர்கள். எதார்த்தமான காதல்வாதிகள் இவர்கள். நிகரியவாதிகளாக இருப்பதை விட இந்த எதார்த்தவாதிகளதான் எப்போதும் வாழ்க்கையிலும் சரி, காதலிலும் சரி, எதிலுமே ஜெயிப்பவர்களாக உள்ளனர்.

சரி காதலில் ஜெயிக்க என்னதான் செய்யலாம்...ஒன்றுமே செய்யாதீர்கள், நீங்கள் நீங்களாகவே இருங்கள், பாதி ஜெயித்ததற்கு அது சமம். இயல்பு வாழ்க்கையில் எல்லாவற்றுக்குமே முக்கியம். எவன் ஒருவன் இயல்பாக இருக்கிறானோ, அவனே எல்லாவற்றிலும் வெல்கிறான் என்று ஒரு பழமொழி கூறுகிறது.

காதலில் பொய்களுக்கு நிறைய இடம் உண்டு. அதேசமயம், 99 சதவீதம் உண்மை, ஒரு சதவீதம் பொய் என்று வைத்துக் கொண்டு அணுகிப் பாருங்கள், நீங்கள் மின்னல் வேகத்தில் கிளவுட் 9க்குப் போய் விடலாம். நிஜம்தான் சார், பொய் இல்லை.! அதேசமயம், அந்த ஒரு சதவீத பொய்யைக் கூட காரணத்தோடு கூறினால் சாலச் சிறந்தது.

காதலியிடம் நிறையப் பேர் பொய் சொல்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். உன் கன்னம் ஒரு பஞ்சு மெத்தை என்பார்கள், கண்ணை ஏதாவது ஒரு இல்லாத பூவுடன் ஒப்பிட்டுச் சொல்வார்கள் - அதாவது 16 வயதினிலே படத்தில் இல்லாத செந்தூரப் பூவை வைத்து கங்கை அமரன் பாட்டு எழுதியது போல - கூந்தலை அப்படி இப்படி என்று வர்ணிப்பார்கள்.. இப்படி பிட்டுப் பிட்டாக போட்டுக் கொண்டிருப்பார்கள் - சச்சின் படத்தில் வடிவேலுவும், விஜய்யும் போடுவதைப் போல.

ஆனால் அப்படி இருக்காதீர்கள். உங்கள் காதலியின் இயல்பான போக்கிலேயே நீங்களும் டிராவல் பண்ணுங்கள். அவரது உண்மையான அழகை அப்படியே சொல்லுங்கள், அவரது குணத்தை இயல்பாக வர்ணியுங்கள், அவரது தவறுகளை சரியாக சுட்டிக் காட்டுங்கள், அவரது பலத்தை அவருக்கு சொல்லிக் காட்டுங்கள், அவரது பலவீனத்தை அவருக்கே தெரியாமல் திருத்திக் காட்டுங்கள்.

அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம், எப்பப் பார்த்தாலும் வாயை ஈரமாக வைத்திருக்காதீர்கள் - ஜொள்ளு உடம்புக்கு ஆகாது, பெண்களுக்கும் பிடிக்காது. அளவாகப் பேசுவதே காதலுக்கு நல்லது. அளந்து விடாமல் இயல்பாகப் பேசும் ஆண்களைத்தான் பெண்களுக்கு ரொம்பப் பிடிக்கும்.

காதலி மீது நீங்கள் காட்டும் அக்கறை அவரது மனதில் உங்களை உட்கார வைக்கும். அவர் மீது நீங்கள் காட்டும் உண்மையான பரிவை அவர் நிச்சயம் விரும்புவார். நம்மை அவர் காதலிக்கிறாரே, பிறகென்ன, எப்படி வேண்டுமானாலும் பேசி அவரை ஏமாற்றலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். அது பெரிய தவறு. உங்களைப் பற்றி உங்களது காதலிக்கு நிச்சயம் எல்லாமே புரிந்திருக்கும், குறிப்பாக மைன்ட் ரீடிங்கில் நீங்கள் மாட்டிக் கொள்வீர்கள், அப்புறம் உங்களது காதல் டண்டணக்கத்தான்.!

நிறையக் காதலர்கள் போனிலும், மெயிலிலும் மெசேஜிலும் பேசிப் பேசியே காதலை வளர்ப்பார்கள். அது தேவையில்லாதது, அதில் உண்மை இருக்காது, இயல்பு இருக்காது. மனசுக்குள் பேசிப் பாருங்கள், நிச்சயம் நீங்கள் இதயம் வெல்வீர்கள்.

அதெப்படி நான் மனசுக்குள் பேசினால் அவுகளுக்குத் தெரியும் என்று சின்னப்புள்ளைத்தனமாக கேட்கப் படாது... நீங்கள் பேசிப் பாருங்கள், அவருக்குக் கேட்கும். அவர் பேசும்போது உங்களுக்குக் கேட்கும். அப்பதாங்க நீங்க உண்மையாவே காதலிக்கிறீர்கள் என்று அர்த்தம்...

சரி நிறையப் பேசியாச்சு, இனியும் பேசினா அடிக்க வந்தாலும் வருவீங்க. இதை வச்சு போய் காதலை டெவலப் பண்ணுங்க.. ஆல் தி பெஸ்ட்... அப்புறம் சாரே மறக்காதீங்க, இயல்பா இருங்க, இதயத்தை வெல்லுங்க...!

Monday, September 17, 2012

கணவர் மீது சித்ரவதை புகார்: யுக்தாமுகி விவாகரத்து?

கணவர் மீது சித்ரவதை புகார்: யுக்தாமுகி விவாகரத்து? கணவர் மீது சித்ரவதை புகார்: யுக்தாமுகி விவாகரத்து?
கணவர் மீது சித்ரவதை புகார்: யுக்தாமுகி விவாகரத்து?

பிரபல இந்தி நடிகை யுக்தாமுகி இவர் தமிழில் பூவெல்லாம் உன் வாசனம் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். யுக்தாமுகி 1999-ல் உலக அழகி பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கும் நாக்பூரைச் சேர்ந்த ஓட்டல் அதிபர் பிரின்ஸ்டுலிக்கும் 2008-ல் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு கன் வால்முகி என்ற குழந்தை உள்ளது. சந்தோஷமாக சென்ற அவர்கள் குடும்ப வாழ்க்கையில் திடீர் புயல் வீச ஆரம்பித்துள்ளது. கணவர் பிரின்ஸ்டுலி மீது யுக்தாமுகி மும்பை போலீசில் பரபரப்பான புகார் அளித்தார். கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக புகாரில் தெரிவித்து இருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இருவருக்கும் ஓரிரு மாதங்களுக்கு முன்பே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் தற்போது பிரிந்து வாழ்வதாகவும் நெருக்கமானவர்கள் கூறினர். மத்தியஸ்தர்கள் மூலம் சமரச முயற்சி நடந்து அதுவும் தோல்வி அடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கணவரை விவாகரத்து செய்ய யுக்தாமுகி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்வது குறித்து வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறாராம்.

இந்த ஆண்டில் இதுவரை 104 படங்கள் ரிலீஸ்: வசூல் ஈட்டிய டாப் 10 படங்கள்

இந்த ஆண்டில் இதுவரை 104 படங்கள் ரிலீஸ்: வசூல் ஈட்டிய டாப் 10 படங்கள்

இந்த ஆண்டு தமிழில் கடந்த ஆகஸ்டு மாதம் வரை முகமூடியை சேர்த்து 100 படங்கள் வரை வந்தன. தொடர்ந்து இம்மாதம் மன்னாரு, சுந்தரபாண்டியன், பாகன், படங்கள் வந்துள்ளன. இதில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படம் 150 நாட்களை தாண்டி ஓடி பெரும் தொகை லாபம் ஈட்டியுள்ளது.

தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளில் வந்த நான் ஈ படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 15 கோடிக்கு மேல் வசூல் பார்த்துள்ளது. தெலுங்கில் ரூ.75 கோடி ஈட்டியுள்ளது. இந்த படம் ரூ. 40 கோடி செலவில் எடுக்கப்பட்டது. வசூல் ரூ.100 கோடியை தாண்டும் என்கின்றனர்.

லிங்குசாமி இயக்கத்தில் வந்த வேட்டை படமும் லாபம் சம்பாதித்தது. இதில் ஆர்யா, மாதவன், அமலாபால், சமீரா ரெட்டி இணைந்து நடித்து இருந்தனர், இந்த படத்தை இந்தியிலும் ரீமேக் செய்திருந்தார்கள்.

விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்த நண்பன் படமும் வசூல் பார்த்தது. ஷங்கர் இயக்கியிருந்தார். ரூ. 1 கோடி செலவில் எடுத்த மெரீனா படம் ரூ. 3 கோடி லாபம் சம்பாதித்தது. அம்புலி 3டி படமும் ரூ. 4 கோடி வசூல் ஈட்டியது. இதனை ரூ. 2 கோடி செலவில் எடுத்து இருந்தனர்.

கலகலப்பு, காதலில் சொதப்புவது எப்படி, அட்டகத்தி படங்கள் நன்றாக ஓடின. வழக்கு எண் 18/9, கழுகு, உருமி, நான் படங்களும் பேசப்பட்டன. பில்லா 2, தோனி, 3, சகுனி, முகமூடி படங்கள் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டன. ஆனால் இவற்றில் சில படங்கள் வசூலில் திருப்தி அளிக்கவில்லை என்கின்றனர். பல படங்கள் நஷ்டத்தை சந்தித்து உள்ளன.

நான் எந்த நடிகைக்கும் போட்டியில்லை: ஓவியா

நான் எந்த நடிகைக்கும் போட்டியில்லை: ஓவியா நான் எந்த நடிகைக்கும் போட்டியில்லை: ஓவியா
நான் எந்த நடிகைக்கும் போட்டியில்லை: ஓவியா

'சில்லுன்னு ஒரு சந்திப்பு' படத்தில் விமல் ஜோடியாக நடிக்கிறார் ஓவியா. எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இப்படத்தை ஆர்.ரவிலல்லின் இயக்குகிறார். இதில் 'பஸ்ஸே பஸ்ஸே' என்று தொடங்கும் பாடலை விமல் பாடியுள்ளார். இதன் வெளியீட்டு விழா நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

இதில் பங்கேற்ற நடிகை ஓவியா நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ் படங்களில் தொடர்ந்து நடிப்பேன். இங்குள்ள ரசிகர்கள், நடிகர்-நடிகைகளிடம் மிகுந்த அன்பு காட்டுகிறார்கள். 'Òகலகலப்பு' படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடித்தேன். படத்துக்கு தேவையாக இருந்ததால் அப்படி நடித்தேன். அதை ரசிகர்கள் வரவேற்றார்கள்.

'கலகலப்பு' படத்தில் நடித்தபோது எனக்கும் அஞ்சலிக்கும் போட்டி ஏற்பட்டதாக கிசுகிசுக்கள் பரவி உள்ளன. நான் எந்த நடிகைக்கும் போட்டி இல்லை. எனக்கு நானே போட்டியாக இருக்கிறேன்.

'சில்லுன்னு ஒரு சந்திப்பு' படத்தில் விமலுடன் நடிக்கிறேன். இது அவருடன் நான் நடிக்கும் 3-வது படம். இதில் மாணவி கேரக்டரில் நடிக்கிறேன். தொடர்ந்து 'மூடர் கூடம்' என்ற படத்தில் நடிக்க உள்ளேன். மலையாள படங்களில் நடிக்கவும் பேசி வருகிறேன. தமிழில் நிறைய படங்கள் வந்தால் சென்னையில் வீடு பார்த்து குடியேறுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Sunday, September 16, 2012

எம்.டிவி ஷோவில் ஏ.ஆர்.ரகுமான் பாடுகிறார்

எம்.டிவி ஷோவில் ஏ.ஆர்.ரகுமான் பாடுகிறார் எம்.டிவி ஷோவில் ஏ.ஆர்.ரகுமான் பாடுகிறார்
எம்.டிவி ஷோவில் ஏ.ஆர்.ரகுமான் பாடுகிறார்

'எம்.டிவி' பிரபலங்களை வைத்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இசை, நாட்டியம் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை வைத்து சிறப்பு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குகிறது.

'எம்.டிவி'யின் இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது ஆகும். ஏற்கனவே ஒரு சீஸன் இசை நிகழ்ச்சியை தயாரித்து வழங்கியது. தற்போது இசை நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸனை தொடங்க உள்ளது.

'மியூசிக் ஷோ' இரண்டாவது சீஸனில் பிரபல இசைக் கலைஞர்களுடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் கலந்து கொண்டு பாடுகிறார். இதுபற்றி நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஒருவர் கூறியதாவது:-

இந்த முறை இசை உலகில் முன்னணியில் உள்ளவர்களை வைத்து இந்த நிகழ்ச்சியை தயாரிக்க திட்டமிட்டோம். இந்நிகழ்ச்சியில், ஏ.ஆர்.ரகுமானும் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியின் மிகப்பெரிய சொத்து அவர்தான்.

இந்த நிகழ்ச்சி தொடரில் லக்கி அலி, கைலாஷ் கேர் ஆகியோரும் பங்கேற்கின்றனர். இருவரும் இசை உலகில் பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர்கள். டிரம் கலைஞர் ரஞ்சித் பரோம் மற்றும் பிறதுறை கலைஞர்களும் கலந்து கொள்கின்றனர்.

பாகிஸ்தான் பாடகர் அதிப் ஆலம் வருவார் என எதிர்பார்க்கிறோம். நவம்பர் மாதம் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சிக்கான ஷ¨ட்டிங், அடுத்த வாரம் தொடங்குகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நகைச்சுவை நடிகர் லூஸ்மோகன் திடீர் மரணம்

நகைச்சுவை நடிகர் லூஸ்மோகன் திடீர் மரணம் நகைச்சுவை நடிகர் லூஸ்மோகன் திடீர் மரணம்
நகைச்சுவை நடிகர் லூஸ்மோகன் திடீர் மரணம்

பிரபல காமெடி நடிகர் லூஸ் மோகன் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 84. லூஸ்மோகன் 1000 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார். ரஜினிகாந்துடன் 'மூன்று முகம்', 'மாப்பிள்ளை', 'தர்மதுரை' படங்களிலும், கமலுடன் 'நானும் ஒரு தொழிலாளி' படத்திலும் நடித்துள்ளார். 'ரோஜாப்பூ ரவிக்கைகாரி' படத்தில் சிவக்குமாருடன் இணைந்து நடித்தார். பார்த்திபனுடன் 'அழகி' படத்திலும் வந்தார்.

சென்னை மயிலாப்பூர் சாலை தெருவில் உள்ள வீட்டில் மகன் கார்த்திக்குடன் வசித்து வந்தார். சில மாதங்களாக அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. கை, கால்களும் செயல் இழந்தன.

உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. லூஸ் மோகன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தினார்கள்.

இன்று மாலை உடல் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மயிலாப்பூர் ஐ.ஜி. ஆபீஸ் பின்புறம் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. மரணம் அடைந்த லூஸ் மோகனுக்கு ரேவதி, கீதா, லட்சுமி என்ற மகள்களும் உள்ளனர். சென்னை தமிழில் பேசி காமெடி செய்த முதல் நடிகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular Posts